அண்மைய செய்திகள்

recent
-

கிரீஸ் நாட்டில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு - தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத் தீ


கிரீஸ் நாட்டில் பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி 20 பேர் மரணமடைந்துள்ளனர்.

கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகர் அருகில் உள்ள அட்டிகா பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. கடற்கரையை ஓட்டியுள்ள வனப்பகுதியில் இரண்டு இடங்களில் பற்றிய இந்த தீயானது, மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.

இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் உருவாகியது. இந்த காட்டுத் தீயில் பலர் சிக்கிக் கொண்டனர். விபத்து நிகழ்ந்த பகுதியை ஒட்டியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 200க்கும் அதிகமான வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
வீடுகளில் வசித்தவர்கள் மட்டுமின்றி, அவ்வழியாக கார்களில் சென்றவர்கள் பலரும் தீயில் சிக்கிக் கொண்டனர். தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடற்கரை பகுதியில் உள்ளவர்கள் மற்றும் ஓட்டல்களில் தங்கியிருந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், தீ விபத்தில் சிக்கியவர்களில் 20 பேர் பலியாகியுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், தீ விபத்து ஏற்பட்ட சில பகுதிகளை நெருங்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
தீயணைப்பு வீரர்கள் நூற்றுக்கணக்கானோர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.



AFP
AFP
AFP


கிரீஸ் நாட்டில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு - தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத் தீ Reviewed by Author on July 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.