அண்மைய செய்திகள்

recent
-

70 பேர் பலி - பாகிஸ்தானில் மனித வெடி குண்டு தாக்குதல் -


பாகிஸ்தான் நாட்டில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் அப்போது நடந்த இரண்டு வெவ்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 75 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் இஸ்லாமிய கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்த போது வெடித்த வெடிகுண்டால் வேட்பாளர் உள்பட 70 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வருகின்ற 25ஆம் தேதி பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் இப்படி ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் அங்குள்ளோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இதில் பலுசிஸ்தான் மாகாண வேட்பாளர் சிராஜ் ரைசானி உள்பட 70 பேர் பலியானார்கள். இவர் 2008-13ல் இந்த மாகாணத்தின் முதல்வராக பதவி வகித்த நவாஸ் அஸ்லம் ரைசானியின் சகோதரர் ஆன இவர் அவாமி கட்சி சார்பில் போட்டியிட்டார்.
இந்த வாரத்தில் தீவிரவாதிகள் மூலம் ஏற்பட்ட இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவம் இதுவாகும். மேலும் காவல்துறையினர் கூறுகையில் மனித வெடிகுண்டு வகை தாக்குதலாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
ஏற்கனவே இன்று காலை நவாஸ் ஷெரீப்பின் கூட்டணி கட்சி வேட்பாளர் அக்ரம்கானை குறிவைத்து பன்னு பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் ஐவர் பலியானார்கள். அக்ரம் கான் காயங்களுடன் உயிர் தப்பினார்.
அந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தலிபான் இயக்கத்தினர் பொறுப்பேற்றனர். இந்த குண்டு வெடிப்பினால் 75 உயிர்கள் பலியானது மட்டுமல்லாமல் 1200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

70 பேர் பலி - பாகிஸ்தானில் மனித வெடி குண்டு தாக்குதல் - Reviewed by Author on July 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.