அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நானாட்டான் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட 'லூர்து நகர்' கிராமம் மக்களிடம் கையளிப்பு-படங்கள்

மன்னார் மாவட்டம் நானாட்டன் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அமைக்கப்பட்ட 102 ஆவது மாதிரிக்கிராமமான 'லூர்து நகர்' கிராமம் வைபவ ரீதியாக இன்று (5) ஞாயிற்றுக்கிழமை காலை வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.

இன்று     ஞாயிற்றுக்கிழமை (5) காலை 10.30  மணியளவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச   கலந்து கொண்டு 'லூர்து நகர்' கிராமத்தை வைபவ ரீதியாக மக்களிடம் கையளித்தார்.

குறித்த கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 23 வீடுகளை வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

-குறித்த   வீடுகள் திறப்பு நிகழ்வில் அமைச்சர் றிஸாட் பதியுதீன், வடமாகாண அபிவிருத்தி மற்றம் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் என்.மோகன்ராஸ் உற்பட  பிரதேசை சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது  தெரிவு செய்யப்பட்ட 1093  பயனாளிகளுக்கு  சுய தொழில் உபகரணங்கள், மற்றும்  கடன் திட்டத்திகாக  தலா ஒரு இலட்சம் ரூபா பணம் கடன் அடிப்படையில் காசோலையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.



















மன்னார் நானாட்டான் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட 'லூர்து நகர்' கிராமம் மக்களிடம் கையளிப்பு-படங்கள் Reviewed by Author on August 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.