அண்மைய செய்திகள்

recent
-

துரையம்மா அன்பகத்தின்10ம் ஆண்டினை முன்னிட்டு கள்ளியடி கத்தாளம்பிட்டி கிராமத்தில்....படங்கள்

 துரையம்மா அன்பகத்தினர் கள்ளியடி கத்தாளம்பிட்டி கிராமத்தின் தெரிவு செய்யப்பட்ட பயனாளி மாணவர்களின் 16 குடும்பங்களுக்கான பெறுமதியான உலர் உணவு பொதிகள் 19-08-2018 காலை 10-30 மணியளவில் வழங்கும் நிகழ்வில் கள்ளியடி கத்தாளம்பிட்டி கிராமசேவகர் பிரிவில் மாதர்சங்க தலைவி உறுப்பினர்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட மாணவமாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

துரையம்மா அன்பகத்தின் (21-08-2018)10ஆண்டினை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளி மாணவர்களுக்களின் 16 குடும்பங்களுக்கான பெறுமதியான உலர்உணவு பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்நிகழ்வில் தற்போதைய வாழ்க்கைச்சூழலில் பொருளாதாரப்பிரச்சினையினால் கல்வியை தொடரமுடியாத நிலையில் நிறைய மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றார்கள் அவ்வாறில்லாமல் எமக்கான கல்விச்செயற்பாட்டை சேவையாக ஆற்றிவரும் துரையம்மா அன்பகத்தினர்.(ஸ்தாபகர் திரு.உதயன் மறைந்த பின்பும் எமது கிராமத்தின் மாணவர்களின் நலனில் அக்கறையுடன்) தொடர்ந்து தமது சேவையை செயலாற்ற நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் அவர்களுடன் இணைந்து செயற்பட்டால் எமது பிள்ளைகளின் கல்விச்செயற்பாடு நல்ல முன்னேற்றத்தினை அடைவதோடு வளமான கல்விச்சமூகத்தினை உருவாக்கலாம் என்றார் மாதர்சங்கதலைவி

அமைப்பின் தலைவர் தனது கருத்தில் எமக்கான ஒத்துழைப்பினை வழங்குவதானால் நாங்கள் எங்களால் இயன்றளவு கல்விச்செயற்பாட்டுக்கு உதவிசெய்வோம் தேவைகளோடு நிறையமாணவர்கள் உள்ளார்கள் கிடைக்கின்ற சேவையை பெற்று அதை நல்லமுறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றமடையவேண்டும்
எமது சேவை தொடரும்.
தொகுப்பு-வை.கஜேந்திரன்





























துரையம்மா அன்பகத்தின்10ம் ஆண்டினை முன்னிட்டு கள்ளியடி கத்தாளம்பிட்டி கிராமத்தில்....படங்கள் Reviewed by Author on August 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.