மன்னாரில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார் பிரதி அமைச்சர் K.மஸ்தான்-(படம்)
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் உப்புக்குளம் பிரதான வீதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகத்தை பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இதன் போது சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் அமைப்பளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கொழும்பு மற்றும் வவுனியாவில் அலுவலகங்கள் அமைக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு குறித்த அலுவலகம் இன்று (7) ஞாயிற்றுக்கிழமை காலை மன்னாரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில தினங்களில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகம் ஒன்று முல்லைத்தீவிலும் திறந்து வைக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
மன்னார் அலுவலகம் திறந்து வைத்த நிலையில் மக்கள் சந்திப்பு இடம் பெற்றது.
இதன் போது மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் கட்டம் கட்டமாக பிரதி அமைச்சரை சந்தித்து பிரச்சினைகளை முன் வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார் பிரதி அமைச்சர் K.மஸ்தான்-(படம்)
Reviewed by Author
on
October 08, 2018
Rating:
No comments:
Post a Comment