அண்மைய செய்திகள்

recent
-

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க வேண்டுமா? இதோ உப்பு இருக்கே!


பெண்களுக்கு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று கீழே விரிவாக பார்க்கலாம்.
சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் அதிகளவில் இருந்து முகத்தில் அழகை கொடுக்கும். அப்படிப்பட்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இருமுறைகளை பின்பற்றி பலன் பெறலாம்.
தேவையானவை
  • உப்பு- 1 டேபிள் ஸ்பூன்
  • ரோஸ் வாட்டர்- 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
  • 1 டேபிள் ஸ்பூன் உப்பை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  • பின் முகத்தை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின்பு கலந்து வைத்துள்ள கலவையைக் கொண்டு முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • இப்படி வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் உடனடியாக நீங்கிவிடும்.
உப்பின் இதர நன்மைகள்
  • உப்பில் இருந்து கிடைக்கும் முறையான மினரல் சத்துக்கள் நமது உடம்பில் உள்ள இன்சுலின் அளவை சீராக்கி, நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.
  • உப்பில் உள்ள எதிர்மறை அயனிகள், இதய துடிப்பை சீராக்கி, உடலில் எலக்ட்ரோ-கெமிக்கல் செயல்களுக்கு உறுதுணையாக இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
  • இயற்கையாக ஹார்மோன் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் திறன் கொண்டது உப்பு. எனவே இது இயற்கை முறையில் ஆண், பெண் ஆகிய இருபாலரின் கருவளத்தின் ஆரோக்கியத்தை மேமப்டுத்துகிறது.
  • தினமும் காலை எலுமிச்சை நீரில் உப்பு கலந்து பருகுவதால் நாவில் உள்ள எச்சில் சுரப்பிகள் தூண்டிவிடப்படும். இதனால் அஜீரண கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • கார்டிசோல் மற்றும் அட்ரினலின் எனும் இந்த இரண்டு ஹார்மோன்களை உப்பு கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது.
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க வேண்டுமா? இதோ உப்பு இருக்கே! Reviewed by Author on November 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.