கஜா புயல் பாதித்த மக்களுக்காக கொட்டும் மழையில் நேரடியாக களமிறங்கிய பிரபல நடிகர்
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகை உட்பட 6 மாவட்டங்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
புயல் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல நடிகர் அருண்விஜய் நேரடியாக களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி வருகிறார்.
இது குறித்து சற்றுமுன்னர் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தஞ்சாவூருக்கு வந்துள்ளேன். என்னுடன் உதவிக்கு வந்தவர்களுடன் ஊரை சுற்றியுள்ள கிராமங்களில் நிவாரண உதவிகள் வழங்குகிறோம்.
இந்த பகுதியில் கனத்த மழை பெய்து வருகிறது. சில பகுதிகளுக்கு இன்று நிவாரண உதவி வழங்கமுடியும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
கஜா புயல் பாதித்த மக்களுக்காக கொட்டும் மழையில் நேரடியாக களமிறங்கிய பிரபல நடிகர்
Reviewed by Author
on
November 24, 2018
Rating:
No comments:
Post a Comment