அண்மைய செய்திகள்

recent
-

ரணில் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட தகவல் -


நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை மீட்பதற்காக மட்டுமே ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அப்படி ஆதரவு வழங்குவதற்காக எழுத்து மூல உறுதிமொழிகள் எதனையும் அவரிடம் நாம் பெறவில்லை என்பதுடன், நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவருக்கு வாக்களித்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

நாடாளுமன்ற ஜனநாயகத்தை மீட்பதற்காக, காப்பதற்காக மட்டுமே ரணில் விக்ரமசிங்கவுக்கு நாம் ஆதரவு கொடுக்க முன்வந்தோம்.
அதில் வேறு விடயங்கள் இல்லை. அது குறித்து ஏலவே நாங்கள் விரிவாக எமது மக்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கின்றோம்.
ஜனநாயக விரோத முறையில் அதிகாரத்துக்கு வந்த ராஜபக்ஷ தரப்பை வீட்டுக்கு அனுப்பி ஜனநாயகத்தை மீட்பதற்காகவே இந்த நாடாளுமன்ற நடவடிக்கையை நாம் முன்னெடுத்தோம்.

வேறு காரணங்கள் ஏதுமில்லை. ஆனால், ரணிலுக்கு தமிழ் மக்கள் உடனடி பிரச்சினைகள், நெருக்கடிகள், நீண்டகால அடிப்படையிலான நிரந்தர தீர்வு ஆகியவை குறித்தெல்லாம் ஆழ்ந்த கரிசனை உண்டு என்பது எமக்கு நன்கு தெரியும்.

செய்யக்கூடியவற்றை அவர் செய்வார் என்று நாங்கள் நம்பலாம். நம்புகின்றோம். எதிர்பார்க்கின்றோம். நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் விடயத்தில் சிறுபான்மை மக்களின் அரசியல் தலைமைகள் உறுதியாகவும், கரிசனையோடும் உள்ளன.
அதன் வெளிப்பாடே நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கைத் தீர்மானம் என தெரிவித்துள்ளார்.

ரணில் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட தகவல் - Reviewed by Author on December 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.