அண்மைய செய்திகள்

recent
-

பித்தப்பை கற்களை இயற்கை முறையில் கரைப்பது எப்படி?


இன்று மக்கள் அதிகமாக சந்தித்து வரும் நோய்களில் பித்தப்பை கல் நோயும் ஒன்றாகும். ஆனால் பெண்கள் தான் அதிகம் பாதிப்படைகிறார்கள்.
கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது என்று சொல்லப்படுகின்றது.

ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளதோ, அப்போது பித்தக்கற்கள் உருவாகும். அதிலும் சாச்சுரேட்டட் கொழுப்புக்களை கரைப்பதற்கு போதுமான பித்தநீர் பித்தப்பையில் சுரக்காமல் இருக்கும் போது பித்தக்கற்களாக உருவாகின்றன
இதற்கு நாம் அடிக்கடி மருத்துவரை நாடிச் செல்லாமல் வீட்டிலிருந்தே பித்தப்பை கற்களை இயற்கை வழியில் அகற்றலாம். அவை என்ன என்பதை பார்ப்போம்.
  • 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
  • தினமும் ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸை குடித்து வருவது நல்லது.
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் சாப்பிட்டு வந்தால், பித்தக்கற்கள் மாயமாய் மறைந்துவிடும்.
  • 3 கப் நீரை ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் நெருஞ்சில் விதைகளைத் தட்டிப் போட்டு, நன்கு 20 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து ஒரு நாளைக்கு 2-3 கப் குடித்து வந்தால், பித்தப்பையில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறிவிடும்.
  • ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள்.
  • தினமும் கிரான்பெர்ரி மற்றும் சிறிதளவு உப்பு கலந்த ஜூஸை ஒரு டம்ளர் குடித்து வந்தால், பித்தக்கற்கள் மற்றும் பித்தப்பை பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
  • 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அதில் 1/4 டம்ளர் ஆப்பிள் ஜூஸ், பாதி எலுமிச்சையின் சாறு, ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து இறக்கி, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்த பின் அந்த கலவையை தினமும் ஒருமுறை உட்கொண்டு வந்தால் வேண்டும் பித்தப்பையில் உள்ள பிரச்சனைகள் முற்றிலும் அகலும்.
  • ஒரு கப் விளக்கெண்ணெயை லேசாக சூடேற்றி பின் ஒரு துணியை அந்த எண்ணெயில் நனைத்து பிழிந்து, வயிற்றின் வலது பக்கத்தில் வைத்து, ஒரு பிளாஸ்டிக் ஷீட்டால் சுற்றிக் கொண்டு பின்பு சுடுநீர் கொண்டு அவ்விடத்தில் 30-40 நிமிடம் ஒத்தடம் கொடுங்கள். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்தால், பித்தக்கற்களில் இருந்து விடுபடலாம்.
  • 1 கப் சுடுநீரில் 2 டீஸ்பூன் க்ரீன் டீ இலைகளைப் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஒரு நாளைக்கு 2-3 கப் என குடியுங்கள்.
  • வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களான எலுமிச்சை, ஆரஞ்சு, கிவி, பப்பாளி, மாம்பழம், கொய்யா போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.
  • ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் உலர்ந்த டேன்டேலியன் வேரை போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து தினமும் 2 முறை குடித்து வந்தால், பித்தப்பை கற்கள் இயற்கையாக வெளியேறிவிடும்.
  • பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு கப் குடித்து வந்தால், பித்தப்பை கற்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • தினமும் புதினா டீயைக் குடித்து வந்தால், பித்தப்பை சம்பந்தமான பிரச்சனைகள் முற்றிலும் அகலும்.
  • 1/2 டம்ளர் பேரிக்காய் ஜூஸ் உடன், 1/2 டம்ளர் சுடுநீர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை குடித்து வந்தால், பித்தக்கற்கள் வளர்வதைத் தடுக்கலாம்.

பித்தப்பை கற்களை இயற்கை முறையில் கரைப்பது எப்படி? Reviewed by Author on December 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.