மன்/டிலாசால் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-படங்கள்
மன் டிலாசால் கல்லூரி நானாட்டான் இல்ல விளையாட்டுப் போட்டிகள் 25 -01- 2019 அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு பாடசாலை விளையாட்டு மைதானத்தில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் விஜயதாசன் தலைமையில் ஆரம்பமானது.
மன்னார் மாவட்ட பாடசாலைகளில் வரலாற்றில் முதன்முறையாக மெய்வல்லுநர் திறனாய்வு போட்டிகள் மின்னொளியில் நடைபெற்றது. குறிப்பிடத்தக்க விடயம் இந்த நிகழ்வின் பிரதமவிருந்தினராக
மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் K.J.பிறட்லி அவர்களும்
சிறப்பு விருந்தினர்களாக
டிலாசால் துறவற சபையின் மாகாண முதல்வர் அவர்களும்
நானாட்டான் வைத்திய அதிகாரி அவர்களும் இவர்களுடன் பாடசாலைச்சமூகம் பழையமாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலை மாணவ மாணவியரின் கலைக் கதம்பம் எனும் நிகழ்வில் பண்டைய தமிழரின் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக்கேடையங்களும் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
மன்/டிலாசால் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-படங்கள்
Reviewed by Author
on
January 27, 2019
Rating:
No comments:
Post a Comment