அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பொங்கல் நிகழ்வு இடம் பெறும்-விக்கடர் சோசை அடிகளார்-

மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோழிக்க தேவாலயங்களிலும் நாளைய தினம் 15-01-2019 பொங்கல் நிகழ்வுகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்தார்.

தைப் பொங்கல் தினமான நாளை செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பொங்கல் நிகழ்வுகள் இடம் பெறும்.

-குறிப்பாக இறைவன் அளித்த கொடைகளுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் நிகழ்வு இடம் பெறவுள்ளதோடு,விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் மேலும் தெரிவித்தார்.


மன்னாரில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பொங்கல் நிகழ்வு இடம் பெறும்-விக்கடர் சோசை அடிகளார்- Reviewed by Author on January 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.