அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இலங்கையின் 71 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்-படம்

இலங்கையின் 71 ஆவது சு தந்திர தின நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் இடம் பெற்று வருகின்ற நிலையில்,மன்னாரிலும் சுதந்திர தின நிகழ்வுகள் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம் பெற்றது. மன்னார் பிரதான பாலத்தில் காலை 8.15 மணியளவில் முப்படையிர்,பாடசாலை மாணவர்கள்,திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்ட அணிவருப்பு மரியாதை நிகழ்வு இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.பிரதான பாலத்தில் பேன்ட் இணை வாத்தியத்தும் ஆரம்பமான அணிவகுப்பு மரியாதை மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது.

-பின்னர் சர்வமத பிரார்த்தனைகள் இடம் பெற்றதோடு,காலை 8.50 மணியளவில் தேசியக்கொடியினை மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் அவர்களினால் ஏற்றி வைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசியகீதம் இசைக்கப்பட்டதோடு, சர்வ மத நிகழ்வுகளும் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் முப்படைகளின் உயர் அதிகாரிகள்,திணைக்கள தலைவர்கள்,பிரதேசச் செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



















மன்னாரில் இலங்கையின் 71 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்-படம் Reviewed by Author on February 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.