மன்னார் மாவட்டத்தில் குளங்கள், வயல் நிலங்களை ஆக்கிரமிக்கும் -வன இலாகா !!
வனவளப்பாதுகாப்புத் திணைக்களத்தினர் மன்னார் மாவட்டத்தில் விவசாயக் குளங் களையும் வயல் நிலங்களையும் அடாத்தாகக் கையகப்படுத்துகின்றனர்.
கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரும், கமநல கேந்திர நிலையங்களும் அதைத் தட்டிக்கேட்கவில்லை. தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அதிகாரி களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நானாட்டான் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகங்களில், மிகச் சிறிய பரப்பளவைக் கொண்டது நானாட்டான் பிர தேச செயலகம். அங்கு வயல்நிலங்களே அதிகமுள்ளன. கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் கூட இல்லை.
போர் காரணமாக ஏ-14 வீதியால் துண்டாடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால் அந்தக் கிராமத்து மக்கள் அயல் கிராமங்களில் வாழ்ந்து வந்தனர். விவசாய நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது. போர் முடிந்த பின்னர் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டனர்.
அங்குள்ள வயல் வரம்புகள் அழிந்து காணிகளை அடையாளப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. அங்குள்ள காணிகளுக்கு வனவளத் திணைக்களத்தினர் எல்லைகளை வகுத்து வருகின்றனர். எல்லைகள் இடப்படுகின்ற காணிகளில் கமநல அபிவிருத்தித் திணைக்களத்துக்குரிய சின்னத் தேத்தாக்குளி, பெரிய தேத்தாக்குளி, வேம்படிக்குளம் என சிறு குளங்கள் பலவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஆனால் முருங்கன் கமநல கேந்திரநிலையமோ அல்லது கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரோ இந்த நிலங்களை பாதுகாப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காணிகள் கையகப்படுத்தலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அங்கு 359 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் பயிர்ச் செய்கை இடம்பெறுகிறது. தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக 150 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்காணிகள் செய்கையின்றி உள்ளன என்றும் அங் குள்ள சுட்டிக்காட்டுகின்றனர்.
கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரும், கமநல கேந்திர நிலையங்களும் அதைத் தட்டிக்கேட்கவில்லை. தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அதிகாரி களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நானாட்டான் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகங்களில், மிகச் சிறிய பரப்பளவைக் கொண்டது நானாட்டான் பிர தேச செயலகம். அங்கு வயல்நிலங்களே அதிகமுள்ளன. கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் கூட இல்லை.
போர் காரணமாக ஏ-14 வீதியால் துண்டாடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால் அந்தக் கிராமத்து மக்கள் அயல் கிராமங்களில் வாழ்ந்து வந்தனர். விவசாய நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது. போர் முடிந்த பின்னர் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டனர்.
அங்குள்ள வயல் வரம்புகள் அழிந்து காணிகளை அடையாளப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. அங்குள்ள காணிகளுக்கு வனவளத் திணைக்களத்தினர் எல்லைகளை வகுத்து வருகின்றனர். எல்லைகள் இடப்படுகின்ற காணிகளில் கமநல அபிவிருத்தித் திணைக்களத்துக்குரிய சின்னத் தேத்தாக்குளி, பெரிய தேத்தாக்குளி, வேம்படிக்குளம் என சிறு குளங்கள் பலவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஆனால் முருங்கன் கமநல கேந்திரநிலையமோ அல்லது கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரோ இந்த நிலங்களை பாதுகாப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காணிகள் கையகப்படுத்தலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அங்கு 359 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் பயிர்ச் செய்கை இடம்பெறுகிறது. தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக 150 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்காணிகள் செய்கையின்றி உள்ளன என்றும் அங் குள்ள சுட்டிக்காட்டுகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் குளங்கள், வயல் நிலங்களை ஆக்கிரமிக்கும் -வன இலாகா !!
Reviewed by Author
on
February 17, 2019
Rating:
No comments:
Post a Comment