அண்மைய செய்திகள்

recent
-

திடீரென அதிகரித்த இலங்கையின் நிலப்பரப்பு!


இலங்கையின் நிலப்பரப்பினை அளவிடும் நடவடிக்கையினை மீண்டும் நில அளவைத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

அண்மையில் துறைமுக நகரம் மற்றும் மொரகஹகந்த மற்றும் களு கங்கை ஆகிய திட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கையின் நிலப்பரப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அளவீடு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நில அளவைத் திணைக்களத்தின் ஜெனரல் பீ.எம்.பீ.உதயகண்ணா தெரிவித்துள்ளார்.

சமகாலத்தில் இலங்கையின் நிலப்பரப்பு 65610 சதுர கிலோ மீற்றர்களாக காணப்படுகின்றது. எனினும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள இலங்கையின் புதிய அளவீட்டில் நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அளவீட்டு நடவடிக்கையை மார்ச் மாதம் இறுதியில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
திடீரென அதிகரித்த இலங்கையின் நிலப்பரப்பு! Reviewed by Author on February 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.