ஈழத்துக் கலைஞர்களின் பெரு வெற்றியாக வெளிவருகிறது பெருந்திரைப்படம்! -
ஈழப் படைப்பாளர்களின் பெரு முயற்சிகளும், படைப்புக்களின் மீதுள்ள அவர்களின் ஆர்வமும் பல புதிய கருக்களைக் கொண்டு ஆவணப்படங்கள் குறுப்படங்கள் என்பன வெளியாகி பிரம்மிக்க வைக்கின்றன.
உலகளவில் பேசப்படும் குறும்படங்கள் ஏராளம் வெளிவந்து.
கொண்டிருக்கின்றன. அவை பல விருதுகளையும் குவித்துக் கொண்டிருக்கின்றன. ஈழத்துப் படைப்பாளர்கள் மற்றும் புலம் பெயர் படைப்பாளர்கள் கலைஞர்கள் தங்களின் முயற்சிகளில் தீவிரமாக இறங்கி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், ஈழத்தமிழ் சினிமாவின் வரலாற்று தடத்தில் ஐ.பி.சி தமிழ் ஊடக வலையமைப்பின் முதலாவது பெருந்திரைப் படைப்பான FRIDAY AND FRIDAY திரைப்படத்தின் குறு முன்னோட்டம் (teaser) வெளியாகி பாராட்டுக்களைப் பெற்றுவருகிறது.
தமிழ், பிரென்சு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தினை ஈழத் தமிழரான சதா பிரணவன் இயக்கியுள்ளார். தீபன் பிரென்சுத் திரைப்படம் உட்பட பல வெளிநாட்டு படைப்புக்களில் நடித்து வரும் சோபாக சக்தி இப்படத்தில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.
இதேவேளை, 36 வினாடிகளைக் கொண்டதாக அமைந்துள்ள இக்குறு முன்னோட்டத்தில், காவல்துறையிடம் தான் சிரிய பயங்கரவாதி என பிரதான பாத்திரம் சொல்ல முன்னோட்டம் முடிகின்றது.
பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை போன்ற திரைப்படங்களை இயக்கிய தமிழக இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தின் டீசரை லண்டனில் வெளியிட்டுள்ளார். மேலும் விரைவில் இத்திரைப்படம் உலகெங்கும் வெளி வர இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈழத்துக் கலைஞர்களின் பெரு வெற்றியாக வெளிவருகிறது பெருந்திரைப்படம்! -
Reviewed by Author
on
April 06, 2019
Rating:
No comments:
Post a Comment