அண்மைய செய்திகள்

recent
-

குண்டுதாக்குதலில் காயமடைந்தவர்களை நேரில் சென்று சந்தித்த பேராயர் -


குண்டுத் தாக்குதல்களில் காயமடைந்தவர்களை இன்றையதினம் நேரில் சென்று சந்தித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆசி வழங்கியுள்ளார்.
இலங்கையில உயிர்த்த ஞாயிறன்று தற்கொலை படையால் நடத்தப்பட்ட குண்டு தாக்குதல்களில் காயமடைந்த பெருமளவிலானவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களும் மதகுருக்களும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
மேலும், அங்கு சென்ற பேராயர், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்களையும் இறையாசீர்வாதங்களையும் வழங்கியுள்ளார்.

மேலும் நாமும் தற்கொலை படை தாக்குதலில் படுகாயமடைந்த உறவுகள் மிகவிரைவில் சுகம் அடைந்து மீண்டும் வீடு திரும்ப வேண்டும் என தனிப்பட்ட ரீதியில் பிரார்த்திப்போம் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
குண்டுதாக்குதலில் காயமடைந்தவர்களை நேரில் சென்று சந்தித்த பேராயர் - Reviewed by Author on May 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.