மன்னார் மாவட்ட சர்வமதக்குழுவினரின் சர்வமதப் பிரார்த்தனையும் அஞ்சலி நிகழ்வும் -படங்கள்
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டில் இடம் பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்காகவும், நாட்டில் சமாதான சூழ் நிலை ஏற்பட வேண்டியும் மன்னார் துயர்துடைப்பு மறுவாழ்வு சங்கம் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை 03-05-2019 மாலை 3.30 மணியளவில் சர்வ மதப்பிரார்த்தனை இடம் பெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் DIRC-மன்னார் மாவட்ட சர்வமதக்குழுவினரின் சர்வமதப் பிரார்த்தனையும் அஞ்சலி நிகழ்வும் இடம் பெற்றது.
இதன் போது சர்வமத தலைவர்கள் கலந்து கொண்டு குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் குணமடையவும், இந்த நாட்டில் மீண்டும் சமாதான சூழ்நிலை ஏற்படவும் சர்வமதப்பிரார்த்தனைகள் இடம் பெற்றது.
இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியின் பின் மலர்தூவி தீபம் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இஸ்லாம் மதத்தின் மார்க்கம் அதன் சமயச்செயற்பாடுகள் அன்றில் இருந்து இன்று வரை இவ்வாறான கொடிய பாதகசெயல்களுக்கு எப்போதும் துணையிருப்பதில்லை இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் உண்மையில் இஸ்லாமியராக இருக்க முடியாது அல்லாவின் வழியில் வாழும் முஸ்லீம் அன்பு கருணை இரக்கம் சமூக உளப்பாங்குடன் சமாதானத்தின் வழியில் வாழ்வார்கள் ஒரு சிலரின் செயற்பாட்டால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் உள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இவ்வாறான செயற்பாடுகள் இனியும் நடைபெறாமல் இருக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.மௌலவி அவர்கள் தெளிவுபடுத்தினார்.
அதனைத்தொடர்ந்து சர்வமத பிரார்த்தனையும் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டத்தின் சர்வமத்தலைவர்கள் பிரதேசத்தின் சர்வமதக்குழுவினரும் கலந்துகொண்டனர்.
மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் DIRC-மன்னார் மாவட்ட சர்வமதக்குழுவினரின் சர்வமதப் பிரார்த்தனையும் அஞ்சலி நிகழ்வும் இடம் பெற்றது.
இதன் போது சர்வமத தலைவர்கள் கலந்து கொண்டு குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் குணமடையவும், இந்த நாட்டில் மீண்டும் சமாதான சூழ்நிலை ஏற்படவும் சர்வமதப்பிரார்த்தனைகள் இடம் பெற்றது.
இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியின் பின் மலர்தூவி தீபம் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இஸ்லாம் மதத்தின் மார்க்கம் அதன் சமயச்செயற்பாடுகள் அன்றில் இருந்து இன்று வரை இவ்வாறான கொடிய பாதகசெயல்களுக்கு எப்போதும் துணையிருப்பதில்லை இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் உண்மையில் இஸ்லாமியராக இருக்க முடியாது அல்லாவின் வழியில் வாழும் முஸ்லீம் அன்பு கருணை இரக்கம் சமூக உளப்பாங்குடன் சமாதானத்தின் வழியில் வாழ்வார்கள் ஒரு சிலரின் செயற்பாட்டால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் உள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இவ்வாறான செயற்பாடுகள் இனியும் நடைபெறாமல் இருக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.மௌலவி அவர்கள் தெளிவுபடுத்தினார்.
அதனைத்தொடர்ந்து சர்வமத பிரார்த்தனையும் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டத்தின் சர்வமத்தலைவர்கள் பிரதேசத்தின் சர்வமதக்குழுவினரும் கலந்துகொண்டனர்.
மன்னார் மாவட்ட சர்வமதக்குழுவினரின் சர்வமதப் பிரார்த்தனையும் அஞ்சலி நிகழ்வும் -படங்கள்
Reviewed by Author
on
May 03, 2019
Rating:
No comments:
Post a Comment