அண்மைய செய்திகள்

recent
-

மீண்டும் திறக்கப்பட்டுள்ள கொச்சிக்கடை புனித அந்தோணியார்! மனதுருகிய மக்கள் -


இலங்கையை உலுக்கிய பாரிய வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம் நீண்ட நாட்களின் பின்னர் இன்றைய தினம் தேவ ஆராதனைகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தின் ஒரு பகுதி முழுமையான பாதுகாப்பின் கீழ் இவ்வாறு திறந்து விடப்பட்டுள்ளது.
இதன்போது கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் வசிக்கும் பெரும்திரளான மக்கள் மத வேறுபாடுகளின்றி ஆலயத்திற்கு சென்று புனித அந்தோணியாரை மனதுருகி வழிபட்டுச் சென்றனர். மேலும், செவ்வாய்க்கிழமைக்கான விசேட ஆராதனைகளும் அருட்தந்தைகளால் இதன்போது நடத்தப்பட்டன.

இதன்போது பாதுகாப்பு கடமைகளில் பெருமளவிலான கடற்படையினர் இருந்ததோடு வழிபாடுகளிலும் கலநது கொண்டனர்.

மீண்டும் திறக்கப்பட்டுள்ள கொச்சிக்கடை புனித அந்தோணியார்! மனதுருகிய மக்கள் - Reviewed by Author on May 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.