அண்மைய செய்திகள்

recent
-

பத்து மாதங்களேயான இரட்டை குழந்தைகள் கொடூரமாக கொலை! தாயின் பகீர் வாக்குமூலம் -


பலமுறை தற்கொலைக்கு முயன்றும் சாக முடியவில்லை, கொலை செய்தால் தூக்கு தண்டனை கிடைக்கும் என்றே கொலை செய்தேன் என அம்பாறையில் கொலை செய்யப்பட்ட இரட்டை குழந்தைகளின் தாயான என்.அனிஷா வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அம்பாறை - நிந்தவூர் பகுதியில் பத்து மாதங்களேயான இரட்டை குழந்தைகள் கடந்த திங்கட்கிழமை கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தன.
இந்த படுகொலைகளை தாய் மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதுடன், சுயநினைவற்ற நிலையில் இருந்த தாயை பொலிஸார் மீட்டிருந்தனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் விசாரணைகளின் போது வழங்கிய வாக்குமூலத்திலேயே என்.அனிஷா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த குழந்தைகளின் தாயான அனிஷா தற்போது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் உளவள பிரிவில், கணவர் ஏ.சியாதுல் ஹக்கின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரியவருகிறது.
மேலும் சம்மாந்துறை நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர் அங்கொடை வைத்தியசாலையின் உளவள பிரிவில் மேலதிக சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பத்து மாதங்களேயான இரட்டை குழந்தைகள் கொடூரமாக கொலை! தாயின் பகீர் வாக்குமூலம் - Reviewed by Author on July 31, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.