அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு......


தேசிய ரீதியில் நடைமுறையில் உள்ள தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் ஞநோதய மண்டபத்தில் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பம் ஆனது

வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய மீனவர்கள் மீனவ சங்கதலைவர்கள் மீனவதொழிலில் ஈடுபடும் பெண்கள் இளையோர் யுவதிகளுக்காக குறித்த தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அது தொடர்பான நடமுறை ஆலோசனைகள் வழங்கப்பட்டது

குறித்த ஆரம்ப நிகழ்வில் சட்டத்தரணி கெளமிக்கா தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கதின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் திரு.அன்ரனி ஜேசுதாசன் மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் திரு.சோதி குருஸ் அவர்களும் மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் நான்கு மாவட்ட செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்

குறித்த செயலமர்வானது இன்று மற்றும் நாளைய தினம் இடம் பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

மன்னாரில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு...... Reviewed by Author on July 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.