அண்மைய செய்திகள்

recent
-

விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தியமைக்கு இதுதான் காரணம்! இரா.சம்பந்தன் -


எமது பிரச்சினை தீர்க்கப்படாமல், நீண்ட காலமாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்தமையே தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடியமைக்கு காரணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசு கட்சியின் 16ஆவது மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
உள்ளக சுயநிர்ணய உரிமையுடன், நிரந்தரமாக கௌரவமாக சுயமரியாதையுடன் பாதுகாப்புடன் வாழ வேண்டும். தந்தை செல்வா கட்சியை ஆரம்பித்து ஏறத்தாழ 70 வருடங்கள் ஆகிவிட்டன.
அந்தப் பாதையில் நாங்கள் நீண்டதூரம் பயணித்திருக்கின்றோம். சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றோம். இன்னும் இறுதியானதும், உறுதியுமான முடிவு ஏற்படவில்லை.
காரணம் என்னவெனில், உரிய நேரத்தில் உரிய சந்தர்ப்பத்தில் கிடைக்கின்ற பொழுது அதை முழுமையாகப் பயன்படுத்தாவிட்டால், அதனுடைய விளைவுகள் சில நேரங்களில் பாரதூரமாகிவிடும்.
எமது பிரச்சினை நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாக இலகுவாக தீர்க்கப்பட்டிருந்தால், தந்தை செல்வாவினால், முன்வைக்கப்பட்ட நிலைப்பாட்டின் அடிப்படையில், தீர்க்கப்பட வேண்டுமென்று கேட்டார்கள்.
இந்த நாட்டில் சமஸ்டி அடிப்படையில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்று கேட்டார்கள்.

இலங்கை தீவிற்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமென்று கேட்கப்பட்டது. சமஸ்டியை கேட்கவில்லை. அதிகாரப் பகிர்வைக் கேட்கவில்லை. உள்ளக சுயநிர்ணய உரிமையை கேட்கவில்லை. அவர்களின் உணர்வுகளை நாங்கள் தாங்கிக்கொண்டிருக்கின்றோம்.
இந்த நாட்டில், இரண்டாம் தரப் பிரஜைகளாக, அடிமைகளாக வாழ வேண்டிய அவசியமில்லை. 13வது திருத்தம் கொண்டுவரப்பட்டு, அதிகாரப் பகிர்வு ஆட்சி முறை மத்தியில் ஏற்பட்டது.

அதனடிப்படையில், எமக்கு ஓரளவு இணைந்த வடகிழக்கு, சுயாட்சி கிடைத்தது. ஆனால், இப்போது அவை இல்லை. அது உறுதியானதல்ல. அவை நிறைவு பெற வேண்டும்.
உலகில் பல்வேறு ஆட்சி முறைகள், அதிகார பகிர்வுகளின் அடிப்படையில் நிகழ்ந்து வருகின்றன. அவை அனைத்தும் உதாரணங்கள். கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில், அதிகாரப் பகிர்வை நிறைவேற்றுவதற்காக 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஜனாதிபதி பிரேமதாச உட்பட மகிந்த ராஜபக்ச காலத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அவை உறுதி செய்யப்படவில்லை. அரசியல் சாசனத்தில் உள்வாங்கப்படவில்லை. அவை நிறைவு பெற வேண்டும்.
இந்தப் நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், ஏகமனதாக நாடாளுமன்றில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், கருமங்கள் நிறைவேற்றப்பட்டு, அதிலும், கணிசமான முன்னேற்றத்தைக் கண்டு, தற்போது மந்தகதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

ஆனால், அவை இறுதித் தீர்மானமாக கொண்டுவரப்படுமா எனத் தெரியவில்லை.
இதை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. ஆட்சியாளர்கள் தாங்கள் விரும்பும் கருமங்க நிறைவேற்றுவதற்காக அரசியல் தீர்வு ஏற்படுகின்றது, அதிகாரப் பகிர்வு ஏற்படுகின்றது. தாமதிப்பதற்கு முயற்சிக்கின்றார்கள்.
தற்போது வடமாகாணத்தில் பல குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள சனத்தொகை விகிதாசாரத்தை மாற்றி அமைக்கக்கூடிய வகையில், பல்வேறு வழிகளில் பல கருமங்கள் நடைபெற்று வருகின்றன.
நாங்கள் சரித்திர ரீதியாக விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை முன்னெடுத்த நிலங்களில் வேறு இனத்தவர்கள், குடியேற்றப்படுவதை காண்கின்றோம். இவ்வாறான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, அதிகாரப் பகிர்வை தமிழ் மக்களுக்கு வழங்காமல், இருக்கின்றார்கள் போல எமக்குத் தெரிகின்றது.
இவைகள் பாரதூரமான விடயங்கள், இவற்றை அனுமதிக்க முடியாது. இவற்றிற்கு மிக விரைவில் முடிவு காணுவோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் பல கருமங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், புதிய அரசாங்கத்தின் கீழ், புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதென்று, தீர்மானிக்கப்பட்டு, அந்த தீர்மானத்தின் அடிப்படையில், நாடாளுமன்றம் ஒரு அரசியல் சாசன சபையாக மாற்றி அமைக்கப்பட்டு, பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னரும் கூட, இன்று, ஆயுதம் ஏந்தியவர்கள், எமக்காக பேச முடியாத சூழ்நிலையில், அவற்றைப் பயன்படுத்தி தாமதப்படுத்துவதற்கான சூழ்நிலை காணப்படுகின்றது.

ஆயுதம் ஏந்திப் போராடினால் தான் அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆக்கபூர்வமான கருமங்களைப் பேணுவீர்கள். ஆயுதம் போராட்டம் இல்லாவிடின், ஆயுதப் பலம் இல்லாவிடின், அதை கைவிடுவோம் என நீங்கள் இருப்பீர்களானால், அது ஒரு தவறான நிலைப்பாடு.
அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை சிந்திக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அதை நாங்கள் பரிசீலிப்போம். யுத்தம் நடைபெற்ற போது, அரசாங்கம், சர்வதேச சமூகத்திற்கு, ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு வாக்குறுதியைக் கொடுத்தார்கள்.
இந்தப் பிரச்சினைகளை தீர்ப்போம் என்று. அவ்விதமான வாக்குறுதிகளின் அடிப்படையில், விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சர்தேசமும், இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு வழிகளில் உதவினார்கள்.
அவ்வாறு உதவியதன் தாக்கத்தின் நிமித்தம் தான், தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாமல் செய்யப்பட்டார்கள். இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாமல் செய்யப்பட்டதன் பின்னர், வாக்குறுதிகள் காற்றில் பறக்கின்றன.
அவற்றை நிறைவேற்றக் கூடிய நிலைமை இருப்பதாக தெரியவில்லை. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமைப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடியது. எமது பிரச்சினை தீர்க்கப்படாமல், நீண்ட காலமாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்தததன் காரணத்தின் நிமித்தம். 40 வருடங்களாக எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.

சர்வதேச ஒப்பந்தங்கள் செய்தார்கள். பேச்சுவார்த்தை நடாத்தினார்கள். ஆனால், பிரச்சினை தீரவில்லை. அதற்கு மாறாக தமிழ் மக்கள் மீது,அட்டூழியங்கள்,
பலாத்காரங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்தச் சூழ்நிலையில் தான், தமிழீழ விடுதலைப் புலிகள், ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும், அழித்தால், அரசியல் தீர்வை வழங்குவோம் என்ற வாக்குறுதியை மறந்துவிட்டீர்கள் போல் தெரிகின்றது. அதனை மறக்கப் பார்க்கின்றீர்கள் போல் தெரிகின்றது.
அதை நாங்கள் அனுமதிக்க முடியாது. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தக் கருமங்களை நிறைவேற்றக் கூடியவாறு, திட்டங்களை தீட்டி செயற்பட வேண்டிய நிலமை தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில், கலந்து கொண்டுள்ள மக்களை பார்க்கின்ற போது, எமது மக்கள் ஒன்றுபட்டுள்ளார்கள், அவர்கள் எமக்குப் பின்னால், நிற்பார்கள். தமிழ் மக்களின் ஆதரவு எமக்கு இருக்கின்றது, அந்த அடிப்படையில் செயற்பட வேண்டும் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும்.
ஒற்றுமை எமக்குப் பலமான ஆயுதம். நாட்டில் பல பிரச்சினைகள் ஏற்பட்ட போது, நாட்டின் ஆட்சி முறையைக் கூட தீர்மானிக்கக்கூடிய நிலைமையில் இருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தமிழ் மக்கள் அனைவரும், ஒற்றுமையுடன், தெளிவான பாதையில், ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தியமைக்கு இதுதான் காரணம்! இரா.சம்பந்தன் - Reviewed by Author on July 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.