அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கவிதாயினி வெற்றிச்செல்விக்கு கம்போடியாவில் "உலக இந்திராதேவி" விருது

கம்போடியாவில் நடைபெற்ற உலகக் கவிஞர் மாநாட்டில் வெற்றிச் செல்வியின் இலக்கிய சேவையை பாராட்டி கம்போடிய அரசின் "உலக இந்திராதேவி" விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

கம்போடிய நாட்டில் உள்ள ஷியாம் றிப் நகரில் 21-22.09.2019 ஆகிய இருதினங்களில் அங்கோவார்ட் தமிழ்ச் சங்கமும், பன்னாட்டு தமிழர் நடுவமும் இணைந்து நடாத்திய உலகத் தமிழ்க் கவிஞர் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. தமிழர்கள் வாழுகின்ற உலகின் பல பாகங்களிலுமிருந்து கவிஞர்கள் பார்வையாளர்கள் வருகைதந்து மாநாட்டைச் சிறப்பித்தனர்.
இலங்கையிலிருந்து பத்துக் கவிஞர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 நாவல் சிறுகதை கவிதை என தனது வெளியீடுகளாக வெளிவந்தவை
 இதுவரை வெளியிட்ட நூல்கள்
  • போராளியின் காதலி
  • இப்படிக்கு அக்கா
  • இப்படிக்கு தங்கை
  • ஈழப்போரின் இறுதி நாட்கள்
  • முடியாத ஏக்கங்கள்
  • காணமல் போனவனின் மனைவி
  • துளிர்விடும் துயரங்களும் நம்பிக்கைகளும்
  • ஆறிப்போன காயங்களின் வலி
  • வெண்ணிலா
  • குப்பி
இதுவரை பெற்ற விருதுகள்
  • முயற்சித் திருமகள்
  • மன்-கலைச்சுரபி மாவட்ட கலை இலக்கிய விழா
  • புரட்சிக்குயில் -குபேரகா கலாமன்றம் கலைமதி பிரதேச கலை இலக்கிய விழா
  • அல்லிராணி-சாதனைப் பெண் 
  • அமுத நதிப்பிரவாகம் சாதனையாளர் விருது- கலை ஞான ஒளி
  • உலக இந்திரா தேவி
 ஈழத்தின் யுத்த சூழ்நிலையில் இருந்து தன்னை பிரிக்காமல் அன்று நடந்த கொடுமைகளை துயரங்களை இன்றும் சாட்சியங்களாக எழுத்தோவியமாக தந்து கொண்டு இருக்கும் இலக்கியப்போராளி மன்னார் வெற்றிச்செல்வி  வேலுச்சந்திரகலா இவர்களுக்கு இன்னும் பல படைப்புகள் வெளிக்கொணர நியூமன்னார்  இனையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.

 தொகுப்பு-வை,கஜேந்திரன்BA-



















மன்னார் கவிதாயினி வெற்றிச்செல்விக்கு கம்போடியாவில் "உலக இந்திராதேவி" விருது Reviewed by Author on October 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.