அண்மைய செய்திகள்

recent
-

உலக உளநல தினமும் வீட்டு வன்முறையினால்பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்


உலகஉளநலதினமும்வீட்டுவன் முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்
உலக சுகாதார அமைப்பு (WHO)இ உலக உளநல மருத்துவ அமைப்பு(றுகுஆர்) ஆகியவற்றின்அறிவுறுத்தலின் பேரில் உளநலப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் திகதி உலக உளநல தினமாக அனுசரிக்கப்பட்டுவருகின்றது. “உளநல ஊக்குவிப்பும் தற்கொலைத்தடுப்பும்” எனும்தொணிப்பொருளில்இவ்வாண்டிற்கான உளநலதினமானதுமுன்னெடுக்கப்பட்டுள்ளது.

உடலில் எவ்வித நோயும் இல்லாமல் இருப்பது மட்டும் ஆரோக்கியமாகி விடாது. ஒருவர் மனநலம்இ உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்றிருந்தால் மட்டுமேஇ அவரை ஆரோக்கியமானவராக கருதலாம் என்று ”ஆரோக்கியம்”உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.

‘மனது’ என்பது மூளை சம்பந்தப்பட்டது. மூளையின் செயல்பாடுதான் மனதாக உணரப்படுகிறது. நீண்ட கால சோகம்இ வேலையின்மைஇ ஏமாற்றம்இ ஏக்கம்இ தொடர் தோல்விஇ அதிகமான மதுப் பழக்கம்இ எதிலும் பிடிப்பு இல்லாமல் இருப்பது ஆகியவை மன அழுத்தம் உருவாவதற்கு காரணங்களாகக்கருதப்படுகின்றன. இதுதவிர 200-க்கும் மேற்பட்ட உளநோய்கள் உள்ளன. இவையெல்லாம் நம் மனதை தினம்தினம் பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

உளநலம்பாதிக்கப்படுதல்என்பது ஒரு சமூக நோய். குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோரையும் தாக்கும் மனநோயையும்இ அதன் அறிகுறிகளையும் தெரிந்துகொள்வதேஇ அதிலிருந்து மீள்வதற்கான முதல் படி. சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒருவரின் சிந்தனையில்இ செயல்பாடுகளில்இ நடத்தை மற்றும் உணர்வுகளில்இ பிறரை விட வித்தியாசமோஇ தீவிரமோ தெரிந்தால்இ அது மனநலப்பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்.

அப்படி வரும் அறிகுறிகள் ஒருவரிடம் தொடர்ந்து காணப்பட்டால்இ உடனடியாகஇ மனநல மருத்துவர் அல்லது மனநல உளவியலாளரிடம் அழைத்துச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம்.ஒருவர் சரியான மனநிலையில் இருந்தால் மட்டுமேஇ அவரால் சரியான ஆரோக்கியமான முடிவுகள் எடுக்க முடியும். தனது வேலையை திறம்படச் செய்யவும் முடியும். சமூக விஷயங்களில் பங்கெடுத்துஇ நல்ல குடிமகனாகத் திகழ முடியும்.

போர் குடும்பவன் முறை இபணியிடங்களில் ஏற்படும்பாலியல் வன்முறை இணையவன்முறை மற்றும்பொருளாதார சீரழிவுகளினால் உளநலபாதிப்புக்கு உள்ளாகும்பெண்களின்நிலையென்பது இன்று பாரிய அளவில்உயர்ந்துள்ளது. பதினான்குவயதிற்கும்இருபத்திநான்குவயதிற்கும் இடைப்பட்ட எழுபத்தியாறுவீதமான பெண்கள்இணையவன்முறையை ஒருபாரியபிரச்சினையாகக்கூறுகின்றனர்.

குடும்ப (வீட்டு) வன்முறை:

குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படுபவர்களை பாதுகாப்பதற்கென 2005 ஆண்டு முதல் வீட்டு வன்முறை தடைச்சட்டம் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குடும்ப வன்முறை எனப்படுவது ஒரு குடும்ப உறுப்பினர் இன்னுமொரு குடும்ப உறுப்பினர் மீது செலுத்தும் உடல் அல்லது உளவியல் வன்முறை ஆகும். இது கணவன்மனைவி அல்லது மனைவிகணவன் மீது செலுத்தும் வன்முறையைப் பொதுவாக சுட்டி நிற்கின்றது. ஆண் ஆதிக்க மரபுடைய தமிழ்க் குடும்ப கட்டமைப்பில் பெரும்பாலும் ஆண்களே பெண்களை குடும்ப வன்முறைக்கு உட்படுத்துகின்றனர்.

பெண்களின் மீதான வன்முறை என்பது இலங்கையில் வெளிப்படையாகப் பேசப்படாத ஒரு விடயமாகும்.தந்தைவழி ஆணாதிக்கச் சொல்லாடல்களின் அதிகாரபலமும் பொருளாதாரபலமும் பெண்களின் மீதான வீட்டுவன்முறையை கண்ணுக்குத் தெரியாத அல்லது தெரிந்தாலும் அது இயல்பானதொன்றாக ஆக்கியிருக்கிறது.

குடும்ப அமைப்பில் ஒரு ஆண் பெண்ணைத் தாக்குவது என்பது சாதாரணமான ஒன்றாகக் கருதப்படுவதுடன் சம்மந்தப்பட்ட பெண்ணே அதை ஒரு அசாதாரண நிகழ்வாக ஃ வன்முறையாகக் கருதுவதில்லை. இது அவர்களது தலைவிதி அல்லது வினைப்பயன் என்றும் இது நாளாந்த வாழ்வின் ஒரு பாகம் என்றும் நம்புமாறு மக்கள் வழிகாட்டப்படுகின்றார்கள். இது இனம்இ மதம்இ வர்க்கம்இ சாதி போன்ற எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து நிலைப் பெண்களின் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறை என்பதன் கீழ் உடல் ரீதியான வன்முறைஇ வார்த்தை மற்றும் உளரீதியான வன்முறைஇ பாலியல் வன்முறைஇ பொருளாதார வன்முறை என்று துணையைத் துன்புறுத்தல் பல வடிவங்களில் வெளிப்படலாம்.

இவற்றால்பாதிக்கப்பட்டபெண்கள், எந்தவடிவிலும் குடும்பவன்முறை நடைபெறாமல்தடுக்கும்பாதுகாப்புஆணைஇ வீட்டைவிட்டு வெளியேற்றப்படுவதைத்தடுக்கும் இருப்பிட ஆணை  குழந்தைகளைப்பாதுகாத்துக்கொள்ளும்ஆணை, நஷ்ட ஈட்டுஆணை,பணஉதவிஆணைபோன்ற நிவாரணங்களை இச்சட்டத்தின் பெற்றுக்கொள்ளமுடியும்.

காலங்காலமான கூறப்பட்டுவரும் பெண்களின் கடமைகளும் கட்டுப்பாடுகளும் பால்நிலை சமத்துவத்தைப் பேணுவதில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன. வேலைக்குச் சென்றாலும் பெண்களே வீட்டில் வேலைகளை செய்ய வேண்டும் எனும் நிலைஇ பிள்ளைகளையும் உறவினர்களையும் பராமரித்தலும் உபசரித்தலும் போன்றவை சம்பிரதாயப்பூர்வமாக பெண்களே முன்னின்று செய்யவேண்டிய கடமைகளாக உள்ளன.

இன்றைய நவீனயுகத்தில் “ஆணுக்குப் பெண் சமம்” என அனைத்துத் துறைகளிலும் செயற்பட்டு வந்தாலும் அவர்களின் உடைஇ வீட்டிற்கு வர ஏற்படும் காலதாமதம்இ சக மனிதரோடு சகஜமாக பழகுதல் போன்றவை விமர்சிக்கப்படுவதுடன் ஆணுக்கும் பெண்ணுக்குமான சம்பள ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. 

துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண்கள்தாம்செய்யும்செயல்களில்நம்பிக்கைஇழந்தவர்களாகவும்பதக்களிப்புஅடைந்தவர்களாகவும்
தாம்எதற்கும் உபயோகமற்றிருத்தல் என நினைத்தல்இ தன்னையும் குழந்தைகளையும் பற்றிப் பயப்படுதல், உணர்வு மரத்துப்போதல் எதிலும் திருப்தியற்றிருத்தல், குற்ற உணர்வு கொண்டு அடிக்கடிஅழுதல் தாங்கள் எதைச் செய்தாலும் ஒரு போதும் சரிவரச் செய்யவில்லை என்ற தாழ்வுமனப்பான்மை கொண்டிருத்தல்.தோல்விமனப்பான்மை போன்ற கலவையான உணர்வுகளுக்குமத்தியில் வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

நாட்டைத்தாய்நாடென்றும்மண்னைதாய்மண்என்றும்ஆற்றைகங்கைத்தாய்என்றும்புகையிரதங்களையாழ்தேவிபெண்களின்பெயரைக்கொண்டேஅழைக்கும்இ மதிப்பளித்துஏற்றுக்கொள்ளும்உயரியபண்பினைக்கொண்டவர்களாகியநாம்நம்சகஉதிரமாகியதாய்தமக்கைமனைவிமற்றும்மகளின்உணர்வுகளைமதிக்காமல்அவர்களைஓரங்கட்டிவிடுகிறோமோஎன்றுஎண்ணவைக்கின்றனஅன்றாடச்செய்திகள்.

நமதுஇளையசமூகத்தினருக்கும்பிள்ளைகளுக்கும்பெண்களைசகமனுசியாகஏற்றுக்கொள்வதற்குஉரியபயிற்சிகளைவீடுதோறும்வழங்கவேண்டும். அதுபெற்றோராகியநம்ஒவ்வொருவரதுகடமையாகும். இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் தனித்தன்மைவாய்ந்தவர்கள் என்பதையும் அவர்களின் வாழ்க்கையை வாழஅவர்களுக்கு உரிமையுண்டு என்பதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம்ஒவ்வொருவரிடமும்வளரும் போதுமட்டுமேவீட்டு வன்முறை முற்றாக ஒழிப்படும். பெண்கள் உளநலத்தோடும் உடல்நலத்தோடும் வாழும்சமூகம் ஒரு முன்னுதாரணமான சமூகமாக இருக்கும்.

மன்னார்அமுதன்

உலக உளநல தினமும் வீட்டு வன்முறையினால்பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும் Reviewed by Author on October 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.