அண்மைய செய்திகள்

recent
-

மக்களின் பூரண ஒத்துழைப்பு இல்லை என்றால் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது- மன்னார் நகரசபை உறுப்பினர் நி.நகுசீன்.

தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் தற்போது பல்வேறு வீதி அபிவிருத்தி பணிகள் இடம் பெற்று வருகின்றது.

மக்கள் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குகின்ற போது வீதி அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்திக்கொள்ள முடியும் என மன்னார் நகரசபை உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் தெரிவித்தார்.

அமைச்சர் றிஸாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 10 மில்லியன் ரூபாய் நிதியில் மன்னார் உப்புக்குளம் வடக்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள சுமார் 600 மீற்றர் வீதி கொங்கிரீட் வீதியாக அமைக்கும் பணி இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில்   இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,

அமைச்சர் றிஸாட் பதியுதீன் தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்கறுதிகளுக்கு அமைவாக எமது அபிவிருத்தி பணிகள் இடம் பெற்று வருகின்றது. அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக நாங்கள் செயல் பட்டு வருகின்றோம்.மக்களினதும்,கிராமங்களினதும் தேவைகள் இனம் காணப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.

மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கும் பட்சத்தில் அபிவிருத்தி பணிகளை நாங்கள் துரித படுத்த முடியும் என தெரிவித்தார்.

குறித்த வீதி அபிவிருத்தி பணிகளை அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன் மற்றும் மன்னார் நகர சபை உறுப்பினர்களான நிலாமுதீன் நகுசீன், உவைசுல் ஹர்னி,பிரிந்தாவனநாதன் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.





மக்களின் பூரண ஒத்துழைப்பு இல்லை என்றால் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது- மன்னார் நகரசபை உறுப்பினர் நி.நகுசீன். Reviewed by Author on October 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.