அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு !

2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நாடளாவிய ரீதியில்  இன்று சனிக்கிழமை காலை முதல் இடம் பெற்று வருகின்றது.
-இந்த நிலையில் மன்னார் மாவட்டத்திலும் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம் பெற்று வருகின்றது.

-மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு,மடு ஆகிய 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 76 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம் பெற்று வருகின்றது.

-மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு,தேர்தல் கண்காணிப்பு குழுக்களும் அடிக்கடி விஜயம் செய்து அவதானித்து வருகின்றனர்.

மன்னார் தாராபுரம் வாக்களிப்பு நிலையத்தில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் காலை 10.45 மணியளவில் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






மன்னாரில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு ! Reviewed by Author on November 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.