அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இந்து மத பீடம் புத்தாண்டு வாழ்த்துகள் ....

பிறக்கும்  புத்தாண்டு அன்பினால்  மனித மனங்களை  வெற்றி கொள்ள செய்யட்டும் என மன்னார் இந்து மத பீடத்தின் பணிப்பாளர் சிவஸ்ரீ மஹா.தர்மகுமாரக்குருக்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

மானிடம் செழிக்க
மலரும் புத்தாண்டே
நம்பிக்கை ஊற்றினை
நாடெங்கும் நடமாட விட்டு
மனிதம் போற்றும்
மனங்கள் மலரச் செய்வோம்

அன்பில் திளைக்கும்
அகிலம் உருவாக்கிக்கிட அனைவரும் ஒன்றினைவோம்
மதபேதம் ஒழியச் செய்வோம்
முளைக்கும் விதைக்கு
முழு வீரியம் கொடுப்போம்
சுட்டெரிக்கும் சூரியன்
சுகமாக வருட விட்டு
இதமான தென்றலில்
இளைப்பாற நேரம் கொடுப்போம்

மறவாமல் மாரி
மனதார பொழியச் செய்வோம்
நன்றிகள் சொல்ல
நாவிற்கு பழக்கிக் கொடுப்போம்
பலமான நட்பு
பழுதாகாமல் பார்த்துக் கொள்வோம்
வளங்கள் யாவும்
வரமாக வாய்க்கச் செய்வோம்

அனைவர்க்கும்
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் மனியாய் கழிந்து நாளாய் நகர்ந்து, வாரமாய் விரைந்து, மாதமாய் மலர்ந்து, ஆண்டாய் ஓடி, கடந்து கொண்டிருக்கிறது காலம்.
புதிய ஆண்டு, பூமியில் புரளப் போகுது! கொண்டாடி வரவேற்போம்!

 ஒரு அருமையான சொற்றொடரைத் தந்துள்ளார்.பாரதி “அன்புதன்னில் செழித்திடும் வையம்”!

இந்த உலகம் வளம் பெற மழை வேண்டாம், உரம் வேண்டாம். ஆனால் அன்பு என்று ஒன்று இருந்துவிட்டால் தானாக மாதம் மும்மாரி மழை பெய்யும். நல்லறம், நல்லாட்சி செய்யும் இடங்களில் பயிர் செய்யாமலேயே தானியம் தானாக விளையுமாம்! புல்வாயும் (மான்), புலிப்போத்தும் ஒரு துறையில் நீருண்ணுமாம். இதையும் கம்பனும் வள்ளுவனும் காளிதாசனும் எப்பவோ சொல்லிவிட்டனர்.மனித நேயம் கொண்ட மானினிடராய் வாழ்வோம் மனதால் ஒன்றிணைந்து மானிடம் காப்போம் மத குரோதம் களைவோம்
பொய்மையாய் இல்லாமல் உன்மையாய் வாழ்வோம்.

 அன்புடன் சிவஸ்ரீ மஹா தர்மகுமாரக்குருக்கள்
மன்னார் இந்து மத பீடம் புத்தாண்டு வாழ்த்துகள் .... Reviewed by Author on December 31, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.