அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் புதுவருடத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு-

2020 புதுவருடத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்திலும்  முப்படையினர் பாதுகப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

கத்தோலிக்க மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் அதே நேரத்தில் நல்லிரவு திருப்பலிகள் இடம் பெறும் ஆலயங்களிலும் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள்மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்

முக்கிய அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களிலும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் முழு நேர காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்

பொது பாதுகாப்பை உறுதிபடுத்தும் முகமாக இராணுவ மற்றும் பொலிஸாரிம் ரோந்து நடவடிக்கைகளும் இடம் பெற்றுவருகின்றன

அதே நேரத்தில் மக்கள் புதுவருடத்தை கொண்டாடும் முகாமாக பொருட்கள் ஆடைகள் கொள்வனவு செய்வதற்கு என நகர பகுதிகளுக்கு வருகை தருவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

மன்னார் புதுவருடத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு- Reviewed by Author on December 31, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.