அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டத்தின் முதலாவது ஒளிவிழா-படங்கள்

மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டத்தின் முதலாவது ஒளிவிழாவனது  மன்னார்  புதுக்கமம் உயிலங்குளம் இளைஞர் கழக நூலக மண்டபத்தில் 28/12/2019 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில்   மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இவ் ஒளிவிழா நிகழ்விற்கு பொறியியலாளார் திரு.S.விமலேஸ்வரன்ing அவர்களின் தலைமையில் பிரதம விருந்தினராக  அருட்பணி பி.யூட் ஞானராஜ் குரூஸ் பங்குத்தந்தை வஞ்சியன் குளம்  அவர்களும் சிறப்புவிருந்த்னர்களாக
திரு.ம.நித்தியராஜ் கிராம அலுவலர் உயிலங்குளம் அவர்களும்
திரு.ம.ஜோய் பெனிக்னாஸ்  சமுத்தி உத்தியோகத்தர் புதுக்கமம் அவர்களும்

கௌரவ விருந்தினர்களாக
தலைவர் கிராம அபிவிருத்தி சங்கம்
தலைவர்  மாதர் அபிவிருத்திச் சங்கம்
தலைவர் விவசாய அமைப்பு
தலைவர் சிரேஸ்ர பிரஜைகள் சங்கம்
தலைவர் இளைஞர் கழகம்
இவர்களுடன்  தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகள்  மறையாசிரியர்கள்  அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமிழமுது நண்பர்கள் வட்டத்தின் ஆலோசகர் மற்றும் உறுப்பினர்களும் இளைஞர்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வானது விருந்தினர்கள் வரவேற்றலுடன்  மங்கல விளக்கேற்றலும் இறைவணக்க வழிபாடும் வரவேற்புரையினை J.மதுசிக்கா  தொடர்ந்து  வரவேற்பு நடனத்தினை செல்வி அ.கவிதா வழங்க  தலைமையுரையினை திரு.S.விமலேஸ்வரன்ING அவர்கள் வழங்கினார் . அதனைத்தொடர்ந்து மாணவ மாணவிகளின்
  • கரோல் கீதம்
  • நடனம்
  • கிறிஸ்மஸ் தாத்தா நடனம்  என்பன நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது. இவ்நிகழ்வில் விசேடவிதமாக தெரிவுசெய்யப்பட்ட 75 மாணவமாணவிகளுக்கு கிறிஸ்மஸ் தின பரிசுப்பொதிகள் பாடசாலைகற்றல் உபகரணங்கள்  அழைக்கப்பட்ட விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
விருந்தினர்களின் உரையின்  சாரம்சமாக
மாணவர்கள் கல்வியில்  விழிப்பாய் இருங்கள் சூரியனைப்போல் பிரகாசமாய் இருங்கள் எல்லோருக்கும் ஒளியாய் இருங்கள் கல்வியால் தான் உலகை வெல்ல முடியும்  கற்றுக்கொள்ளுங்கள் நல்லறிவை பெற்றுக்கொள்ளுங்கள்.  எல்லோரிடத்திலும் அன்பாய் இருங்கள் ஆளுமைமிக்க சமுதாயத்தினை உருவாக்க உங்களால் தான் முடியும்.

அருட்பணி பி.யூட் ஞானராஜ் குரூஸ் பங்குத்தந்தை வஞ்சியன் குளம்  அவர்ககள் தனது உரையில் மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்ட அமைப்பானது தமது பணியினை கிராமங்களை நோக்கி நகர்த்திசெல்வது பாராட்டுக்குரியது. தேவை எங்கிருக்கிறதோ அங்கு தேடிச்சென்று  தமது பணியினை மாணவர்களுக்காக செயலாற்றுவது சிறப்பான விடையம் என்றார்.
நிகழ்ச்சித்தொகுப்பினை  செல்வி பா.மேரி நிரூபா BFA அவர்கள் நிகழ்வினை அழகான முறையில் தொகுத்து வழங்கினார். மக்களினதும் மறையாசிரியர்களினதும் மாணவர்களினதும் பங்களிப்புடனும் ஒளிவிழா சிறப்பாக நிறைவுபெற்றது.





மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டத்தின் முதலாவது ஒளிவிழா-படங்கள் Reviewed by Author on December 30, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.