அண்மைய செய்திகள்

recent
-

யாழில் கடலுக்கு குளிக்கச் சென்ற இளைஞன் உயிரிழப்பு -


யாழ்.தொண்டமனாறு பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொண்டமனாறு பகுதியில் உள்ள கடல் நீரேரியில் இன்று பிற்பகல் தனது 5 நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கையில் குறித்த இளைஞன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் இணைந்து சுமார் ஒரு மணிநேரமாக தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்ததுடன், குறித்த இளைஞனை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டுள்ளனர்.

யாழ்.பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த 26 வயதுடைய கந்தசாமி கஸ்தூரன் இளைஞரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில் கடலுக்கு குளிக்கச் சென்ற இளைஞன் உயிரிழப்பு - Reviewed by Author on January 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.