அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் டெலோ கட்சியின் மன்னார் நகர சபை உறுப்பினர் சுயேற்சையாக பாராளுமன்ற தேர்தலில் போட்டி-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான 'தமிழீழ விடுதலை இயக்கம்'  'டெலோ' கட்சியின் மன்னார் நகர சபை உறுப்பினர் 'மனோ ஐங்க சர்மா' தலமையிலான குழு ஒன்றுபாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்களை  வெள்ளிக்கிழமை13-03-2020 மதியம் வவுனியாவில் மேற் கொண்டுள்ளனர்.

எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் மன்னார் மாவட்டம் வன்னி தேர்தல் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட 'தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சி' எனும் பெயரில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மன்னாரில் குறித்த சுயேட்சைக் குழுவின்   வேட்பு மனு தாக்கல் பேசாலை முருகன் கோவில் பிரதம குருவும், மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவருமான சிவ சிறி மஹா தர்ம குமார குருக்கள் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் மன்னார் நகர சபை உறுப்பினர் 'மனோ ஐங்க சர்மா' கட்சி விதி முறைகளுக்கு அப்பால் சுயேற்சையாக எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக பேட்டியிட உள்ள நிலையில், அக்கட்சியின் தலைமை இது வரை   தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சி மன்னார் நகர சபை உறுப்பினர் மனோ ஐங்க சர்மா விற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் மேற் கொள்ள வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-மன்னார் நகர சபையின் தலைவராக உள்ள ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனை ஒரு வருடத்தின் பின்னர் மாற்றி அக் கட்சியை சார்ந்த மனோ ஐங்க சர்மா விற்கு வழங்குவதாக கட்சி கூறிய போதும் இது வரை வழங்கவில்லை என கோரியே குறித்த இந்து மக்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

மன்னாரில் டெலோ கட்சியின் மன்னார் நகர சபை உறுப்பினர் சுயேற்சையாக பாராளுமன்ற தேர்தலில் போட்டி- Reviewed by Author on March 15, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.