அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வெடி பொருட்கள் புதைத்து வைத்துள்ளதாக சந்தேகத்தின் பேரில் நீதவான் முன்னிலையில் அகழ்வு.

மன்னார்-தலை மன்னார் பிரதான வீதி,பேசாலை பிரதேசத்திற்கு உற்பட்ட  வியாயடிப் பண்ணை காட்டுப் பகுதியில் ஆயுதங்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்கு இடமானவகையில் பொருட்கள புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலில் அடிப்படையில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இன்று வியாழக்கிழமை (12) மாலை குறித்த பகுதியில் அகழ்வு நடவடிக்கை இடம் பெற்றது.

மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மன்னார் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று குறித்த பகுதியில் அகழ்வு நடவடிக்கை இடம் பெற்றது.

இன்று வியாழக்கிழமை மாலை 3.30   மணியளவில் மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் குறித்த காட்டுப்பகுதியில்  அகழ்வுப்பணி இடம் பெற்றது.

இதன் போது மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி, பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமஜித்,  விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உற்பட வைத்தியர், கிராம சேவையாளர் ,உற்பட உரிய அதிகாரிகள் சமூகமளித்திருந்தனர்.
  குறித்த அகழ்வின் போது எவ்வித சந்தேகப்பொருட்களும் மீட்கப்படவில்லை.

இந்த நிலையில் குறித்த அகழ்வுப்பணி நாளை வெள்ளிக்கிழமை மாலை 2 ஆவது நாளாக இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.





மன்னாரில் வெடி பொருட்கள் புதைத்து வைத்துள்ளதாக சந்தேகத்தின் பேரில் நீதவான் முன்னிலையில் அகழ்வு. Reviewed by Author on March 12, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.