அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில்-ஈஸ்ரர் குண்டு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக விசேட நினைவேந்தல் நிகழ்வு.

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம் பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு இன்றுடன் 21-04-2020 ஒரு வருடம் நிறைவடைகிறது.

உயிரிழந்த மக்களை நினைவு கூறும் வகையில் இன்று மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து கோயில்,கத்தோலிக்க தேவாலயம், மற்றும் பள்ளி வாசல்களில் விசேட பிரார்த்தனைகள் இடம் பெற்றது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இன்று செவ்வாய்க்கிழமை  காலை 8.45 மணிக்கு வீடுகளில்   உயிரிழந்த மக்களுக்காக இரண்டு நிமிட  அஞ்சலி செலுத்துமாறு   வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக வீடுகளில் மௌ அஞ்சலி செலுத்தப்பட்டது. இதே வேளை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவின் ஏற்பாட்டில் விசேட நினைவேந்தல் நிகழ்வானது அதன் குழுத்தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில்

இன்று செவ்வாய்க்கிழமை 10.00 மணியளவில் மெசிடோ நிறுவன கேட்போர்கூடத்தில் இடம் பெற்றது இதன் போது இறந்தவர்களுக்காக விசேட பிரார்த்தனை இடம் பெற்றதுடன் மெழுகுதிரி ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.






மன்னாரில்-ஈஸ்ரர் குண்டு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக விசேட நினைவேந்தல் நிகழ்வு. Reviewed by Author on April 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.