அண்மைய செய்திகள்

recent
-

திங்கட்கிழமை முதல் 1500 இ.போ.ச. பஸ்கள் சேவையில்


எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மேலும் 1,500 பஸ்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன. 

 ஊடரங்கு சட்டம் தளர்த்தப்படும் பகுதிகளுக்குள் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் A.H. பண்டுக தெரிவித்துள்ளார். அலுவலக நேரங்களை அடிப்படையாகக் கொண்டு பஸ்கள் இயங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தேவையேற்படும் பட்சத்தில் கட்டணங்களை அறவிட்டு, அலுவலகங்களுக்கு பிரத்தியேக சேவையை வழங்குவதற்கும் தயாராகவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

 மாவட்டங்களுக்குள் பயணிப்பதற்கு மாத்திரமே அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது. இதனைத் தவிர, வைத்தியசாலைகளில் சுகாதார சேவை ஊழியர்களுக்கான போக்குவரத்திற்காக நாடு முழுவதும் 426 பஸ்களை ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை மேலும் கூறியுள்ளது.
திங்கட்கிழமை முதல் 1500 இ.போ.ச. பஸ்கள் சேவையில் Reviewed by Author on May 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.