அண்மைய செய்திகள்

recent
-

ரயில் மற்றும் பஸ் பயணங்களை அதிகரிக்க நடவடிக்கை.....


இலங்கை போக்குவரத்துச் சபை சேவையில் ஈடுபடுத்தும் பஸ் வண்டிகளை இன்று தொடக்கம் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன் போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்சிலி ரணவக்க தெரிவித்தார்.

இதேவேளை, ரயில் பயணங்களையும் இன்று முதல் அதிகரிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று 33 ரயில் பயணங்களை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்த கூறினார்.

நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு போக்குவரத்து சேவையினை வழமை போன்று முன்னெடுப்பது அவசியம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ரயில் மற்றும் பஸ் பயணங்களை அதிகரிக்க நடவடிக்கை..... Reviewed by Author on June 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.