அண்மைய செய்திகள்

recent
-

இனி அனுமதிப்பத்திரமின்றி மணலைக் கொண்டு செல்பவர்கள் கைது ...

அனுமதிப்பத்திரமின்றி மணலைக் கொண்டு செல்பவர்களைக் கைது செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1992 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க சுற்றாடல் சட்டத்திற்கமைய, மணலைக் கொண்டு செல்வதற்கு அனுமதிப்பத்திரம் அவசியமெனவும், அமைச்சரவைப் பத்திரத்தினூடாக அந்த அனுமதிப்பத்திர முறைமை இரத்து செய்யப்பட்டுள்ளது என்ற நிலைப்பாடு தவறான புரிதலால் ஏற்பட்டுள்ளதாகவும் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக செலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

இதனைக் கருத்திற்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி A.H.M.D.நவாஸ் மற்றும் நீதிபதி ரோஹித ராஜகருணா ஆகியோர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்..





இனி அனுமதிப்பத்திரமின்றி மணலைக் கொண்டு செல்பவர்கள் கைது ... Reviewed by Author on July 17, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.