அண்மைய செய்திகள்

recent
-

மகப்பேற்று சத்திர சிகிச்சை பரீட்சையில் அதிவிசேட சித்தி பெற்று சாதனை படைத்த இளம் தமிழ் வைத்தியர்

 திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் மாணிக்கம் சிவ தீபன்ராஜ், மகப்பேற்று சத்திர சிகிச்சை பரீட்சையில் அதி விசேட தர சித்தியடைந்துள்ளார். மகப்பேற்று சத்திர சிகிச்சை பரீட்சையில் சித்தி பெற்று அகில இலங்கை ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 திருகோணமலை, இறக்கக்கண்டி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர் நிலாவெளி கைலேஸ்வரா மகாவித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை கற்றுள்ளார்.

 திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் வைத்தியத் துறையில் கல்வி பயின்று வந்துள்ளார். அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற மகப்பேற்று சத்திர சிகிச்சை பரீட்சையில் 30 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 இதில் திருகோணமலைக்கு பெருமையை தேடித் தரும் வகையில் அதிவிசேடசித்திபெற்ற 30 வயதுடைய மாணிக்கம் சிவ தீபன்ராஜ் என்பவர் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



மகப்பேற்று சத்திர சிகிச்சை பரீட்சையில் அதிவிசேட சித்தி பெற்று சாதனை படைத்த இளம் தமிழ் வைத்தியர் Reviewed by Author on August 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.