அண்மைய செய்திகள்

recent
-

மயில் மற்றும் மான் வளர்த்த ஒருவர் கைது

அனுமதி இன்றி வளர்த்து வந்த மான் மற்றும் மயில் ஒன்றுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 தேசிய புலனாய்வு அதிகாரிகளினால் வழங்கிய தகவலுக்கு அமைய திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொட்டகலை ஹட்டன் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் இருந்தே நேற்று (25) பிற்பகல் வனவிலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

 மான் ஒன்றையும் மயில் ஒன்றையும் மீட்ட அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதுடன் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மீட்கப்பபட்ட வன விலங்குகளை, வனவிலங்கு சரணாலயத்திற்கு ஒப்படைப்பதாகவும் தெரிவித்தனர்.

மயில் மற்றும் மான் வளர்த்த ஒருவர் கைது Reviewed by Author on September 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.