அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாண புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளது- யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேஸ்வரன்

யாழ்ப்பாண புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

  புங்குடுதீவு நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த மூன்று வாரங்களாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதி தற்காலிக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் குறித்த புங்குடுதீவு பகுதியானது இன்று(20) காலையிலிருந்து தற்காலிக முடக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இன்றிலிருந்து புங்குடுதீவு பிரதேசம் வழமைக்குத் திரும்பும் மேலும் புங்குடுதீவு பகுதியூடான போக்குவரத்துக்கள் வழமைபோன்று இடம்பெறும் அது தொடர்பில் பிரதேச செயலர் மற்றும் கடற்படை போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் அப்பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளினை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அப்பகுதிக்கு சென்று வரும் பொதுமக்களும் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் குறித்த பகுதியானது சுகாதாரப் பிரிவினரால் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளது- யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேஸ்வரன் Reviewed by Author on October 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.