அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சட்ட விரோதமாக கடத்த தயார் நிலையில் இருந்த ஒரு தொகுதி காய்ந்த கடலட்டை மீட்பு

மன்னார் புதுகுடியிருப்பு நூறு வீட்டு திட்டம் பகுதியில் கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 335 கிலோ கிராம் எடை கொண்ட காய்ந்த கடலட்டை இன்று ஞாயிற்றுகிழமை மதியம் 12 மணியளவில் மன்னார் மாவட்ட பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

  மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல்ல வீரசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மாவட்ட குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி குமார பல்லேவல மற்றும் உதவி பொலிஸ் பரிசோதகர் சாமர ராஜபக்ஸ தலைமையிலான மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவினரின் தலைமையிலான குழுவினரே மேற்படி புதுக்குடியிருப்பு பகுதியில் புகையிரத கடவைக்கு அருகில் கடத்தி செல்வதற்கு தாயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கடலட்டைகளை கைப்பற்றியுள்ளனர்.
  மேற்படி கைப்பற்றப்பட்ட கடலட்டைகள் அனைத்தும் மேலதிக விசாரணையின் பின் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்க மேற்கொள்ளபட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட கடலட்டைக்கள் சுமார் 11,75000 மேல் பெறுமதி உடையவை என்பது குறிப்பிடதக்கது.
                







மன்னாரில் சட்ட விரோதமாக கடத்த தயார் நிலையில் இருந்த ஒரு தொகுதி காய்ந்த கடலட்டை மீட்பு Reviewed by Author on October 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.