அண்மைய செய்திகள்

recent
-

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்றுமுன் வௌியான விசேட அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி காலை 5.00 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. விசேட அறிவிப்பொன்றை மேற்கொண்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

 முன்னதாக மேல் மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை (29) நள்ளிரவு முதல் நாளை (02) காலை 05.00 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, எஹலியகொடை பொலிஸ் பிரிவிற்கு நாளை 05 காலை முதல் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி காலை 05.00 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும், குருணாகலை நகர சபை பிரிவு மற்றும் குளியாபிடிய பொலிஸ் பிரிவிற்கு நாளை காலை 05 மணி முதல் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி காலை 05 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்றுமுன் வௌியான விசேட அறிவிப்பு! Reviewed by Author on November 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.