நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் விபரம்
இலங்கையில் இதுவரையில் 11,060 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் மினுவங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,582 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் 1,041 பேர் ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்கள் என்பதுடன் ஏனைய 6,541 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் 4,905 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 6,134 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் 179 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் 93 பேர் கொழும்பு மாவட்டத்தையும் 33 பேர் களுத்துறை மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் மேல் மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் விபரம்
Reviewed by Author
on
November 02, 2020
Rating:
No comments:
Post a Comment