அண்மைய செய்திகள்

recent
-

சகோதரியை தாக்கி கொன்ற சகோதரன்!

புத்தளம் – கற்பிட்டி, ஆலங்குடா பி முகாமில் சகோதரனின் தாக்குதலுக்குள்ளான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் விஷேட தேவையுடைய ஐனூல் மரிலியா (வயது-43) என்பவரே சகோதரரின் தாக்குதலில் மரணமாகியுள்ளார். ஒரே வீட்டில் வசித்து வந்த சகோதரன், தாய் மற்றும் சகோதரிகளுக்கிடையே வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த குறித்த சகோதரன் தனது 43 வயதுடைய சகோதரியை இரும்புக் கம்பியினால் கடுமையாக தாக்கியதுடன், 32 வயதான மற்றுமொரு சகோதரியையும், தாயையும் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் 43 வயதாக பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரின் மற்றொரு 32 வயதுடைய சகோதரியும் காயங்களுடன் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்

.
சகோதரியை தாக்கி கொன்ற சகோதரன்! Reviewed by Author on April 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.