மன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு.
அவற்றில் யாழ்ப்பாணத்தில் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் நேற்று சனிக்கிழமை(15) மாலை கிடைக்கப் பெற்றுள்ளது.
அவற்றில் 10 பேரூக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் மன்னார் பெரியகமம், சாவக்காடு, உப்புக்குளம், பேசாலை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள்.அவர்கள் தற்போது சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் 527 பீ.சி.ஆர்.பரிசோதனைகளுக்கான முடிவுகள் எதிர் பார்க்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.
மேலும் இந்த வருடம் ஜனவரி தொடக்கம் தற்போது வரை 383 கொரோனா தொற்றாளர்களும், மொத்தமாக 400 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மே மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் தற்போது வரை 41 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் இது வரை 3 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த மாதம் 1288 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 527 பீ.சி.ஆர். பரிசோதனைகளுக்கான முடிவுகள் எதிர் பார்க்கப்பட்டுள்ளது.
காய்ச்சலுடன் மூச்சு எடுப்பதில் சிரமம் அல்லது சுவாச குணங்குறிகளுடன் மூச்சு எடுப்பதில் சிரமம் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையை நாடுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு.
Reviewed by Author
on
May 16, 2021
Rating:
No comments:
Post a Comment