சுற்றுலா சென்ற வேன் விபத்து இரண்டு வயது குழந்தை உட்பட இருவர் பலி
புஸ்ஸல்லாவ பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
வான் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
புஸ்ஸல்லாவ - ஹெல்பொட பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த குழந்தை
கொழும்பில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலாச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்றே திரும்பி வரும் வழியில் இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களில், 2 வயதுக் குழந்தையும் 70 வயது முதியவரும் உயிரிழந்ததாகவும், விபத்தின் போது மொத்தம் 10 பேர் வானுக்குள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விபத்து தொடர்பான விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj62A4s3wYv07zyt4pTzEuzM_34J8WTCoGTHsXd5ZosamS7pC9na1eAYzqKQ5x5dvTAgnUUEvangtt9SNtt8dS5Ier-c2x6_RvwJ91A5e2FC4bb0s7lM7MEUmWoWAhN8JVpOQkEMUH9Lxq_kA3TV9tc6izEkMRnmLz4GrIvRxQwTrhun-iI0GUMGtJ-34zF/s72-w640-c-h320/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg)
No comments:
Post a Comment