விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்டவர் கைது
இவர் 2019 ம் ஆண்டு கட்டாருக்கு சென்றவர் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நபர் விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் ஊடாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கட்டாரினால் நாடு கடத்தப்பட்டார், திருகோணமலையில் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்த பின்னர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்டவர் கைது
Reviewed by Author
on
July 16, 2021
Rating:
No comments:
Post a Comment