ரிசாட் வீட்டில் உயிரிழந்த இஷாலினியின் மரணம் குறித்து அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்.....!
அவர் கூறிய தகவல்கள் வருமாறு-
டயகம சிறுமி இஷாலினி, பொன்னையா என்ற டயகம பிரதேசத்தைச் சேர்ந்த தரகர் ஊடாகவே ரிஷாட்த்தின் இல்லத்திற்குத் தொழில்பெற்றுச் சென்றார். இதற்காக பொன்னையாவுக்கு 5000 ரூபா அளிக்கப்பட்டதாகவும், இஷாலினி மற்றும் பொன்னையா பயணம் செய்த முச்சக்கர வண்டிக்கு வாடகையான 5000 ரூபாவும் ரிஷாத் வீட்டிலிருந்து கொடுக்கப்பட்டது.
இஷாலினி எப்பொழுது வேலைக்கு சென்றார் என்பதை தாயாரால் குறிப்பாக சொல்ல முடியவில்லை.
எனினும், தரகர் பொன்னையா 2020ஆம் ஆண்டு நவம்பரில் பணிப்பெண்ணாக சென்றதாக குறிப்பாக கூறியுள்ளார்.
மாதாந்தம் 20,000 ரூபா சம்பளத்திற்காக இஷாலினி சென்றார். இதுவரை இஷாலினியின் தாயாருக்கு இரண்டு இலட்சம் ரூபா பொன்னையா ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
ரிஷாத் பதியுதீனின் வீட்டிற்குள் இஷாலினிக்கு அறையெதுவும் ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லை. ரிஷாத்தின் வீட்டு வளாகத்தில் ஒதுக்குப் புறமாக இருந்த பழைய அறையில் இஷாலினி தங்கவைக்கப்பட்டார். அதில் இரும்பினாலான கட்டில் மட்டுமே இருந்தது.
இஷாலியின் தாயார் 4 தடவைகள் அவரை சந்திக்க அந்த வீட்டிற்கு வந்திருக்கிறார். எனினும், இஷாலினி புத்தளம் வீட்டில் இருப்பதாகக்கூறி தாயாரா அனுப்பி வைத்துள்ளனர்.
அண்மையில் ஒருநாள், இஷாலினி தாயாருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். ரிஷாத் வீட்டு ஆண் பணியாளரின் தொலைபேசி ஊாடாக பொன்னையாவிற்கு அழைப்பேற்படுத்திய சந்தர்ப்பத்தில் உரையாடியுள்ளார். அப்போது இஷாலினி பேசிய தொலைபேசி அவுட் ஸ்பீக்கரில் விடப்பட்டிருந்தது, அந்த சந்தர்ப்பத்தில்தான் தன்னை தும்புத்தடியால் அடிப்பதாக இஷாலினி முறையிட்டுள்ளார்.
அது குறித்து இஷாலினியின் தாயார், ரிஷாத் பதியுதீனின் மனைவியிடம் கேட்டுள்ளார்.
எனினும், அதனை மறுத்த ரிஷாத் மனைவி, வேலைகளை விரைவாக செய்யாத காரணத்தினால்தான் திட்டியதாக கூறியுள்ளார்.
அப்போது, இஷாலினியை வீட்டுக்கு வருமாறும், தான் அவருக்கு பதிலாக வேலைக்கு வருவதாகவும் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இஷாலினி அதனை மறுத்துள்ளார்அப்போது, இஷாலினியை வீட்டுக்கு வருமாறும், தான் அவருக்கு பதிலாக வேலைக்கு வருவதாகவும் தாயார் குறிப்பிட்டுள்ளார். எனினும், இஷாலினி அதனை மறுத்துள்ளார்.
மகள் தீ வித்தில் சிக்கிய பின்னர் தகவலறிந்து தாயார் ரிஷாத் வீட்டிற்கு வந்து, பின்னர் வைத்தியசாலை சென்றா்.
மகள் நீண்டநாளாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானதை அறியவில்லையென தாயார் தெரிவித்துள்ளார். “மகள் பூப்போன்றவர்“ என தெரிவித்துள்ளார்இஷாலினி தீ்க் காயமடைந்த சந்தர்ப்பத்தையும் பிரனீத்தா வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
தீக்காயமடைந்த நிலையில் வீட்டின் பிரதான கூடத்திற்கு வந்த இஷாலினி தண்ணீர் கேட்டதாகவும், அதன் பின் அங்கிருந்த மீன்தொட்டியில் பாய்ந்ததாகவும் ரிஷாட்டின் இல்லத்திலிருந்தவர்கள் தன்னிடம் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
தரகர் பொன்னையா மிகுந்த மனஉளைச்சலுடன் இருப்பதாகவும், தன்னால் உறங்க முடியாமல் இருப்பதாகவும் தன்னிடம் குறிப்பிட்டதாகவும் கூறியுள்ளார்
ரிசாட் வீட்டில் உயிரிழந்த இஷாலினியின் மரணம் குறித்து அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்.....!
Reviewed by Author
on
July 21, 2021
Rating:
No comments:
Post a Comment