யாழிலிருந்து கொழும்பு பயணித்த இபோச பஸ் வவுனியாவில் வைத்து திருப்பியனுப்பப்பட்டது..!
அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 5.45 மணிக்கு பஸ் ஒன்று கொழும்பு நோக்கிப் பயணித்தது.
குறித்த பஸ்ஸை வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் சோதனைக்கு உட்படுத்தியதில் பேருந்தில் பயணித்தவர்களில் பலர் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளை உறுதிப்படுத்தத் தவறியுள்ளனர்.
அதனால் அத்தியாவசிய தேவைகளின்றிய பயணிகளை ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டு ஈரப்பெரியகுளத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டது.
இதேவேளை,
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில்களில் பயணிப்போர் தமது கடமை அலுவலக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவ தேவைகளுக்குப் பயணிப்போர் அதுதொடர்பான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழிலிருந்து கொழும்பு பயணித்த இபோச பஸ் வவுனியாவில் வைத்து திருப்பியனுப்பப்பட்டது..!
Reviewed by Author
on
July 14, 2021
Rating:
No comments:
Post a Comment