அண்மைய செய்திகள்

recent
-

சுகாதார வழிகாட்டல்களை மீறி முன்னெடுக்கப்படும் திருமணம் உட்பட பிற நிகழ்வுகளால் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகலாம்!

கொவிட் -19 சுகாதார வழிகாட்டல்களை மீறி திருமண நிகழ்வுகள் மற்றும் பிற நிகழ்வுகளை முன்னெடுக்கப்படுவதால் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போது நாட்டில் டெல்டா கொரோனா வைரஸ் பரவிவரும் வரும் நிலையில், மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என பொது சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளரான ஹேமந்த ஹேரத் இன்று தெரிவித்துள்ளார். 

சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் கடைப்பிடித்து திருமணங்களை முன்னெடுப்பது மூலம், புதிய கொத்தணிகள் உருவாக்குவதை குறைக்க முடியும். இது புதிய கொவிட் -19 கொத்தணிகள் உருவாகும் அபாயத்தை முற்றிலுமாக அகற்றுவதாக அர்த்தமல்ல எனவும் அவர் வலியுறுத்தினார். திருமண நிகழ்வுகளை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுப்பதுடன், குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள் மற்றும் சமூக இடைவெளியை பேணல் என்பன முக்கியமானதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சுகாதார வழிகாட்டல்களை மீறி முன்னெடுக்கப்படும் திருமணம் உட்பட பிற நிகழ்வுகளால் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகலாம்! Reviewed by Author on July 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.