அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மூன்று கோடி பெறுமதியான கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிப்பு

மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூராய் பகுதியில் கஞ்சா கடத்தல் இடம் பெறுவதாக கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட குற்றபுலணாய்வு(DCDB)பிரிவினரால் கல்பிட்டி பகுதிக்கு கொண்டு செல்ல முயற்சித்த 131 கிலோ 725 கிராம் ,கேரளா கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது 

 மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ளவீரசிங்க வின் பணிப்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி மற்றும் மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு தற்காலிக பொறுப்பதிகாரி I.P.அசங்க,உதவி பொலிஸ் பரிசோதகர் ராமநாயக தலைமையிலான அணியினரே மேற்படி கடத்தி செல்லப்பட்ட கேரள கஞ்சா மற்றும் கொண்டு செல்ல பயன்படுத்திய கூலர் வாகனம் மற்றும் 2 சந்தேக நபர்களையும் கைது செய்து உள்ளனர்.

 கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் கல்பிட்டி பகுதியை சேர்தவர்களாவர்,மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் கூலர் வாகனம் என்பன மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது. கைப்பற்றபட்ட கஞ்சா மூன்று கோடியே ஐம்பது லட்சத்துக்கு அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது 





மன்னாரில் மூன்று கோடி பெறுமதியான கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிப்பு Reviewed by Author on August 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.