அண்மைய செய்திகள்

recent
-

சைவ மெய் அடியார்களிற்கு திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச்சபை விடுக்கும் அறிவித்தல்

எமது பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான சிவபூமி மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தில் ஆடி மாத அமாவாசை நாள் மிகவும் சிறப்பாக பூசை வழிபாட்டுடன் ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது அனைவரும் அறிந்ததே அதே போன்று இவ்வருடமும் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் திருப்பணிச்சபையினரால் முன்னெடுத்துவரும் இத்தருணத்தில் எமது நாட்டில் புதிய வகை தீநுன்மி நோய்ப்பரவல் (Covid 19) மிக வேகமாக பரவி வருவதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். 

அதற்கமைய பூசை வழிபாடுகள் ஆலயத்தில் நடைபெற்றாலும் அர்ச்சனை செய்வது பாலாவிப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடுவது மற்றும் திருவமுது வழங்குதல் என்பன போன்றவை தற்காலிகமாக நோய்த்தொற்றினை தவிர்க்கும் முகமாக நிறுத்தப்பட்டுள்ளமையினை அன்படியார்களுக்கு மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம். 

எனவே அடியார்கள் குறித்த ஆடி அமாவாசை தினத்தன்று ஆலயத்தில் ஒன்று கூடுவதனை தவிர்த்து வீட்டில் இருந்தவாறே தந்தையை, கணவன் மற்றும் ஆண் பிள்ளையை இழந்தவர்கள் நோன்பிருந்து மனம்,மொழி,மெய்களால் வினைகளை அறுத்து வீடு பேறு வழங்கும் திருக்கேதீச்சர பெருமானை வழிபட்டு உங்கள் தந்தைக்கும் முன்னோருக்கும் மீண்டும் பிறப்பில்லாத பேரின்ப பெருவாழ்வு கிடைக்க வேண்டும் என்று தத்தமது வீடுகளில் இருந்தவாறே நெய்த்தீபம் ஏற்றி பிரார்த்திக்குமாறு வேண்டுவதோடு உலகினையே பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள இக்கொடிய நோயிலிருந்து விடுபட்டு சுபீச்சத்துடன் மனித குலம் வாழ உருக்கமாக வழிபடுவோமாக. 

இவ்வண்ணம்   
திருக்கேதீச்சர 
ஆலய 
திருப்பணிச்சபை 
திருக்கேதீச்சரம்





சைவ மெய் அடியார்களிற்கு திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச்சபை விடுக்கும் அறிவித்தல் Reviewed by Author on August 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.